web log free
September 08, 2024

வீதியில் பதவியேற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுச் செயலாளர்  

 

நீதிமன்றத்தின் தடை உத்தரவு நீக்கத்தின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக இன்று பதவியேற்றார்.

 கட்சியின் கதவு சாவி தொடர்பில் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவரை கட்சி தலைமையகத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை.

அதன்படி, கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர பதவியேற்றார்.